posted 27th November 2021
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதான பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த மாணவிக்கு நேற்றையதினம் திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார.
இதன்போது குறித்த மாணவி நான்கு மாதங்கள் கர்ப்பம் தரித்துள்ள விடயம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த துடன் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மாதர்பனிக்கர் குளம் பகுதியை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையான 32 வயது குடும்பஸ்தரை கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House