
posted 29th November 2021
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது இன்று (29.11.2021) அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடத்திய கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House