இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் யாழ். மாநகர சபை முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்ஜர் செயுப்ர்ட்டுக்கும் யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தூதரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார்.

அத்துடன், யாழ். மாநகர சபைக்கும் ஜேர்மனியின் பிரதான நகரங்களுடன் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு இணைந்து செயல்படுவதற்கும் உதவ வேண்டும் என்றும் முதல்வர் தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அத்துடன் முதல்வரால் தூதுவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் யாழ். மாநகர சபை முதல்வர் சந்திப்பு
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் யாழ். மாநகர சபை முதல்வர் சந்திப்பு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House