
posted 24th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ் போதனாவைத்தியசாலை இனி தேசிய வைத்தியசாலையாகும்

யாழ் போதனாவைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் என யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டிடத்தை இன்று (24) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை தவிர பிராந்திய மட்டத்தில் தற்போது தேசிய வைத்தியசாலைகளை ஆரம்பிக்கும் திட்டத்தை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. அத் திட்டத்தின்கீழ் முதன்முதலாக காலி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)