
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மேற்தளம் அமைக்க அடிக்கல்
ஏழு அடி உயர சிவன் சிலையுடன்கூடிய மேற்தளத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நிந்தவூர் - மடத்தடி மீனாட்சி அம்மன் - சிவன் ஆலயத்தில் நடைபெற்றது.
சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் இந்த நிர்மாணப் பணியை அட்டப்பள்ளத்தை சேர்ந்த விவேகானந்தம் கமலாதேவி தம்பதியர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில், சிவனாலய பூசகர் கே. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
சோழர்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு தூர்ந்து கிடந்த மடத்தடி மாட்டுப்பளையிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தில் ஏலவே அழகிய சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்துக்கு மேற்தளம் அமைக்கவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)