
posted 2nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மே தினத்தன்று வெறிச்சோடியது கல்முனை மாநகர வர்த்தக நிலையங்கள்
உலக தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டியும், தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கும் நோக்குடனும் கல்முனை மாநகரில் முதல் தடவையாக சகல வர்த்தக நிலையங்களும், பொதுச் சந்தையும் மூடப்பட்டு நேற்று (01) கல்முனை மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய பொருளாதார மையமாகத் திகழ்கின்ற கல்முனை மாநகர பொதுச் சந்தை மற்றும் பஸார் பகுதி வரலாற்றில் முதல் தடவையாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டமை முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகின்றது.
இதற்கென கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் என்பன மே தின கடையடைப்பு வியாபார முடக்கம் தொடர்பில் தீர்மானங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சாய்ந்தமருது வர்த்தக சங்கமும் சகல வர்த்தக நிலையங்களையும் மூடும் தீர்மானத்தை மே தினத்தன்று நடைமுறைப்படுத்தியதுடன் மே தின கூட்டமொன்றையும் ஒழுங்கு செய்து சிறப்பாக நடாத்தியதுடன் தொழிலாளர்களுக்கென விசேட பரிசளிப்பு நிகழ்வுகளையும் நடாத்தியது.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)