
posted 18th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்துக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர்
யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நேற்று (17) வெள்ளிக்கிழமை காலை, கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது பனை உற்பத்தி பொருள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
குறித்த நிகழ்வில் பனை அபிவிருத்திச் சபையின் சபையின் தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா, பனை அபிவிருத்திச் சபையின் உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனபால உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் சபையின் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)