
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நீங்களே பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள் நம்பும் முல்லைத்தீவு மக்கள்
முல்லைத்தீவு மக்களின் பிரச்சினைகளை உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
மூன்று நாள் பயணமாக வடக்கு வந்துள்ள ஜனாதிபதி ரணில் நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் நடந்த காணி உரித்து வழங்கும் நிகழ்வில் பங்கேற்றார்.
இங்கு உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் எம். பி. பேசுகையில்,
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஜனாதிபதி வருகைதந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்களால்தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும். காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)