
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து முல்லைத்தீவு மக்கள் போராட்டம்

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி முல்லைத்தீவின் கொக்குதொடுவாய், கொக்கிளாய் கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று (08) புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில்;
"மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து"
"எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே"
"மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா"
"எமக்கு நீதி வேண்டும்"
"மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து"
என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மனு கையளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)