
posted 6th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நடிகர் பாண்டியராஜன் யாழ்ப்பாணம் வருகை
தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் கொழும்புத்துறையில் இடம்பெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார்.
"மக்களுக்கு சினிமாவும் சீரியலும் வழிகாட்டுகிறதா? வழிமாற்றுகின்றதா?" என்ற தலைப்பிலும் "இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தே? ஆனந்தமே?" என்ற தலைப்பிலும் இரு பட்டிமன்றங்கள் நடைபெற்றன.
இந்தப் பட்டிமன்றத்தினை காண பல இடங்களிலும் இருந்து மக்கள் வருகை தந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)