
posted 10th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மரக் குற்றிகள் மீட்பு
வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.ஏ. தனபால அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் நேற்று முன்தினம் பொலிஸாரால் (08) மீட்கப்பட்டன.
அப்பகுதி பொதுமக்கள், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர் சி.ஏ. தனபால அவர்களுக்கு வழங்கிய இரகசியமான தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு அளவுகளில் வெட்டப்பட்டு மறைத்து வைத்திருந்த 195 மரக்குற்றிகள் மீட்கப்பட்டன.
இந்த மரக்கடத்தல் காவல்துறையினர் அல்லது வேறு அரசு அதிகாரிகளின் துணையுடன் செய்யப்பட்டதா என்பது குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டவிரோத வியாபாரிகளை கண்டறியும் விசேட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தலை தடுத்து எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது முதன்மையான பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)