
posted 7th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குடும்பஸ்தரை தாக்கியவரை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் இளம் குடும்பஸ்தரை தாக்கியவரை கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக நேற்று (06) கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்:
'பொலிஸார் பக்கசார்பாக செயல்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்'
'பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே'
'பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்'
என்றவாறு கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார்.
இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகைதந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)