
posted 16th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமனம்
கிளிநாச்சி மாவட்டத்தின் சாரண மாவட்ட ஆணையாளராக கடமையாற்றிய மு. பிரேம்குமார் கடந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக சேவையாற்றி அவரது சேவை காலம் முடிவடைந்தமையால் புதிய மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன், அவர்களை பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெர்னான்டோ அவர்கள் கிளிநொச்சி மாவட்ட சாரண ஆணையாளராக நியமித்து அவர்களுக்கான கடிதத்தினை இன்று புதன்கிழமைவழங்கி வைத்தார்.
புதிய மாவட்ட ஆணையாளர் பளை மத்திய கல்லூரியில் சிறந்த சாரணராக சேவையாற்றி, ஜனாதிபதி விருதினை பெற்றவர். அவர் அப்பாடசாலையை தேசிய ரீதியில் பல சாதனைகள் படைப்பதற்கு காரணமாக இருந்தவர் ஆவார். அத்துடன் கிளிநொச்சி உதவி மாவட்ட ஆணையாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)