
posted 8th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஒலுவிலில் ரஹ்மத் பவுண்டேசனால் பொதுக் கிணறுகள் நிர்மாணம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்திருக்கின்ற நீர்க் கட்டணம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒலுவில் பிரதேசத்திலுள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) பேரவையின் ஒருங்கிணைப்பில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பினால் பொதுக் கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபகரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மிகக் குறுகிய காலத்தினுள் அதனை நிறைவேற்றித் தந்தமைக்காக ரஹ்மத் மன்சூருக்கு இதன்போது நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒலுவில் பிரதேச நலன் விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)