
posted 21st May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஈரானிய ஜனாதிபதியின் மறைவையொட்டி இலங்கையில் துக்க தினம்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் (63 வயது) மற்றும் முக்கியஸ்த்தர்கள் எட்டுப்பேரும் ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமடைந்தமைக்கு இலங்கையில் ஒரு நாள் துக்க தினம் இன்று 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
இத் துக்க தினத்தினை அனுஷ்டிக்குமாறு அரசு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் முக்கிய நகரங்கள், அரச அலுவலகங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை கிழக்கிழங்கையின் பல்வேறு முக்கிய முஸ்லிம் பிரதேசங்களிலும் குறிப்பாக வர்த்தக நிலையங்களிலும் துக்க தினத்தையொட்டி வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.
மேலும் ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க உட்பட அரசியல் முக்கியஸ்த்தகர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், இலங்கைலுள்ள ஈரானிய தூதுவரை சந்தித்து அனுதாபம் தெரிவித்தும் அங்குள்ள அனுதாபப் புத்தக்கத்தில் கையொழுத்திட்டும் வருகின்றனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)