
posted 17th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று (16) வியாழன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திவரை பேரணியாக சென்று பல்கலைக்கழகத்தை மீண்டும் வந்தடைந்தது.
இலங்கை முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பின் ஒரு பகுதியாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் வேதன முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)