
posted 21st May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பிறந்த தினத்தில் மரணத்தைத் தழுவிய யுவதி
யாழ்ப்பாணம் புத்தூர் வீரவாணி சந்திக்கு அண்மையில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், நேற்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் நேற்றும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)