
posted 11th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.
அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் காலை 7 30 மணிக்கு சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பிரதம பூசகர் அவர்களார் சுமார் 10 க்கு மேற்பட்டவேல்கள் யாத்திரிகர்களிடம் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கையளிக்கப்பட்டு அங்கிருந்து பாதயாத்திரிகர்கள் வேல்கள் நந்திக்கொடிகள் சகிதம் காலை சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு சென்று அங்கும் இடம்பெற்றறபூசைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இடம் பெற்ற அன்னதானம், மற்றும் சிறிய தொகை பணமும் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டதுடன் விசேட பஜ
னைகளும் இடம் பெற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் யாத்திரிகர்களை வழியனுப்பிவைத்தார்.
அதனை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்து ஒரு அணி ஆவரங்கல், புத்தூர் ஊடக மட்டுவில் பன்றித்தளர்சி அம்மன் கோவில் வழியாக செல்கிறது. இன்னும் ஒரு அணி பருத்தித்துறை வல்லிபுரம் நாகர்கோவில் மருதங்கேணி ஊடாக செல்கிறது.
இன்றைய சனிஇந் யாத்திரையில் 140 யாத்திரிகள் செல்கின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு வழிகளில் யாத்திரிகர்கள் சென்றாலும் அம்பாறைஉகந்தை முருகன் ஆலயத்திலிருந்து ஒன்றாகவே கதிர்காம கந்தன் ஆலயம் வரை செல்லவுள்ளனர். இவர்கள்45 தொடக்கம் 52 நாட்களில் நாள் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர். அங்கு சென்றதும் கதிர்காம கந்தன் திருவிழா நிறைவடையும் வரை தங்கியிருந்தே வீடுகளுக்கு திரும்புவது வழமையாகும். முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று (11) சனிக்கிழமை ஆரம்பமாகியது.
அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் காலை 7 30 மணிக்கு சிறப்பு பூசைகள் இடம் பெற்று சந்நிதியான் ஆலய பிரதம பூசகர் அவர்களார் சுமார் 10க்கு மேற்பட்ட வேல்கள் யாத்திரிகர்களிடம் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கையளிக்கப்பட்டு அங்கிருந்து பாதயாத்திரிகர்கள் வேல்கள், நந்திக்கொடிகள் சகிதம் காலை சந்நிதியான் ஆச்சிரமத்திற்க்கு சென்று அங்கும் இடம்பெற்ற பூசைகளில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து இடம் பெற்ற அன்னதானம் மற்றும் சிறிய தொகை பணமும் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டதுடன் விசேட பஜனைகளும் இடம் பெற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் யாத்திரிகர்களை வழியனுப்பிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரு அணிகளாகப் பிரிந்து ஒரு அணி ஆவரங்கல், புத்தூர் ஊடக மட்டுவில் பன்றித்தளர்சி அம்மன் கோவில் வழியாக செல்கிறது. இன்னும் ஒரு அணி பருத்தித்துறை வல்லிபுரம் நாகர்கோவில் மருதங்கேணி ஊடாக செல்கிறது.
இன்றைய சனி இந்த யாத்திரையில் 140 யாத்திரிகள் செல்கின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு வழிகளில் யாத்திரிகர்கள் சென்றாலும் அம்பாறை உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து ஒன்றாகவே கதிர்காம கந்தன் ஆலயம் வரை செல்லவுள்ளனர். இவர்கள் 45 தொடக்கம் 52 நாட்களில் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர். அங்கு சென்றதும் கதிர்காம கந்தன் திருவிழா நிறைவடையும் வரை தங்கியிருந்தே வீடுகளுக்கு திரும்புவது வழமையாகும்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)