
posted 17th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மா வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தைச் சோந்த 15 வயது சிறுமி கடந்த 7ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அம்மம்மா வீட்டுக்குச் சென்று அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது காட்டுப் பகுதியை அண்டிய பகுதியில் வைத்து சிறுமியை இரு இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளனர்.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த 26, 21 வயதுடைய இரு இளைஞர்களைக் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)