
posted 31st May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கோபாலபுரத்தில் கோலாகலமான வரவேற்பு
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் சந்நிதி- கதிர்காம ஜெயாவேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினருக்கு திருகோணமலை கோபாலபுரத்தில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோபாலபுரம் தமிழ் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மகத்தான வரவேற்பை வழங்கினார்கள்.
கோபாலபுரத்தை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வாழும் ஆசிரியை திருமதி விஜயகுமாரி மகேஸ்வரன் இதற்கு அனுசரணை வழங்கினார்.
நேற்றுமுன்தினம் (29) நிலாவெளியில் தங்கிய அவர்கள் நேற்று (30) திருகோணமலையை அடைந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)