
posted 20th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடும் மழை, காற்றால் ஆலயத்தின் கூரை சேதம்
கடும் மழை மற்றும் காற்றால் வேலணையில் கோயில் ஒன்றின் கூரை சேதமடைந்ததாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (18) மழையுடன் கடும் காற்று வீசியது. இதன்போது, தீவகம் - வேலணையில் ஜே/21 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆலயம் ஒன்றே இவ்வாறு பெரும் சேதமடைந்தது.
இரவுநேரம் நடந்த இந்த சம்பவத்தால் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)