
posted 14th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe
மனிதநேயச் செயற்பாடுகள் முன்னெடுப்பு
1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வாழும் களுவாஞ்சிகுடி மக்களால் ஏற்படுத்தப்பட்ட 'களுவாஞ்சிகுடி நலன்புரிச் சங்கம் பிரித்தானியா' அமைப்பால் அதன் வெள்ளி விழா ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் களுவாஞ்சிகுடியில் இயங்கும் ஆறு முன்பள்ளிகளுக்கு திங்கட்கிழமை (08) அக்குழுவின் பிரதிநிதிகள் நேரடியாகக் கள விஜயம் மேற்கொண்டு தேவைகளைக் கேட்டறிந்தனர். இவர்களின் தேவைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்ற உறுதி மொழியை அவர்கள் இதன்போது வழங்கினர்.
இச் சங்கத்தினர் கடந்த 25 வருடங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் கல்வி மேம்பாடு, விளையாட்டு, சமய, சமூகநல அபிவிருத்தி போன்றவற்றினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருந்தனர்.
இதேவேளை அண்மையில் இச்சங்கத்தினர்க்கான புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. அதனடிப்படையில் தலைவராக சங்கரலிங்கம் அனோஜனும், செயலாளராக மாணிக்கம் சந்திரசேகரமும், பொருளாளராக திருமதி ரமணி ஜெயபாலனும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களோடு 12 பேர் கொண்ட செயற்குழுவும் அமைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)