
posted 14th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
மே18 முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயக மக்கள் அமைப்பினால் காந்தி பூங்கா முன்பாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் உயிர்நீத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூவிக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்தக் கஞ்சி வழங்கும் நிகழ்வில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து கஞ்சிகளை வேண்டி அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், ஞா. ஸ்ரீநேசன், சர்வ மத தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)