
posted 13th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திருமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றைத் தொடர்ந்தும் இளைய சமூகத்தினருக்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் என பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
நேற்று (12) திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கான அரிசி மற்றும் விறகு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு திருகோணமலை சிவன்கோவிலடி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)