
posted 16th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சுழல் காற்று
பூநொச்சிமுனை கடலில் ஏற்பட்ட பெரும் கடல் அலை தாக்கத்தால் சில மீன் பிடி படகுகள் உடைந்து சேதமடைந்தன என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
சுழல் காற்று காரணமாக ஏற்பட்ட பெரும் கடல் அலையால் இரு இயந்திர மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்தன. அத்துடன், மற்றோர் படகின் இயந்திரமும் சேதமடைந்தது.
இதே போன்று காத்தான்குடி ஏத்துக் கால் கடற்கரையிலும் மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பாகமீனவர் சங்கங்கள் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)