
posted 28th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 305வது மலர் வெளியீடு
ஞானச்சுடர் 305 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நேற்று 26/05/2023 சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரின் 305 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை இளைப்பாறிய பல்கலைக்கழக ஒழுங்காற்று உத்தியோகத்தர் .ஐ.கோ. சந்திரசேகரம், மதிப்பீட்டுரையினை ஆசிரியர் துரை கணேசமூர்த்தி ஆகியோர் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பலருக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ், கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)