கிழக்குப் பெருநகர அபிவிருத்தி

உறவுகளின் துயர்பகிர - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்குப் பெருநகர அபிவிருத்தி

கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் நிலாவெளி பகுதிகள் கடல் மற்றும் சூழல், சுற்றுலா வலயங்களாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் மற்றும் பாசிக்குடா பகுதிகள் மீன்பிடி மற்றும் சுற்றுலா வலயங்களாகவும், அம்பாறை மாவட்டத்தில் கோமாரி முதல் பாணமை வரையான பகுதிகள் கடலோர சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன், கிண்ணியா மீன்பிடி கைத்தொழில் நகரமாகவும், புல்மோட்டை நகரம் கனிம கைத்தொழில் நகரமாகவும், மூதூர் நகரம் பசுமை சக்தி நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நடந்த விசேட கலந்துரையாடலிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தைத் தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் இறுதி மதிப்பாய்வுப் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூரின் நகர வடிவமைப்பு நிறுவனம் கிழக்குப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. முதல்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கே இந்தத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதன் கீழ் இந்த மாவட்டங்கள் பொருளாதார, வர்த்தக, கலாசார மற்றும் சுற்றாடல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.

இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், எனவே தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்த அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். அதன் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.

விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்படும் எந்தவொரு பிரதேசத்திற்கும் நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இது 1978/41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.

கிழக்குப் பெருநகர அபிவிருத்தி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)