
posted 22nd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
'உறவுகளுக்கு கரம் கொடுப்போம்' அமைப்பின் உதவிகள்
பருத்தித்துறையில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஜேர்மனி ஸ்ருற்காட் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'உறவுகளுக்கு கரம் கொடுப்போம்' அமைப்பின் நிதி பங்களிப்புடன் வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமரர் வைத்திலிங்கம் அம்பலத்தின் 22ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
கரகம்பனை பிரதேசத்தில் உதவி தேவைப்படுவோர் என்று அடையாளம் காணப்பட்ட 18 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த குடும்பங்களுக்கு ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)