இலங்கையில் பத்திரிகை சுதந்திர தினமும் அதன் வரலாறும்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கையில் பத்திரிகை சுதந்திர தினமும் அதன் வரலாறும்

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இலங்கையில் தலை நகர் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கிலும் இடம்பெற்றது.

இலங்கையில் கொண்டு வரப்படவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஊடகவியலாளர்களின் குரல்வளையை, சுதந்திரத்தை நசுக்கும், கட்டுப்படுத்தும், சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகப் பெரும் விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில் சர்வதேசப் பத்திரிகை சுதந்திர தினத்தை இலங்கை ஊடக அமைப்புக்கள் அனுஷ்டித்துள்ளன.

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், இதுவரை கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், புதிதாக கொண்டு வரப்படவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சடத்தை நிராகரிக்குமாறு கோரியும், இந்த நிகழ்வுகளில் ஊடகவியலாளர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தன.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் எதிரணி அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன், நாட்டின் தற்போதய நிலமை குறித்து ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்றும் கொழும்பு மெண்டரின் ஹோட்டலில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பத்திரிகை சுநத்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்ட வரலாறு,

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 - ம் திகதி கொண்டாடப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3 - ம் திகதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது.

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட , ‘உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திர மற்றும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கிக் கௌரவிக்கின்றனர்.

இவ்விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 இல் அவரது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் கொலையின் பின்னரே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான பேச்சு வலுப்பெற்றது.

இலங்கையில் பத்திரிகை சுதந்திர தினமும் அதன் வரலாறும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)