
posted 27th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கை முதலுதவிச் சங்கத்தினால் சான்றிதழ் வழங்கல்
யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையினரால் மாணவர்களுக்கு முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் ஆகிய தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட 25 மாணவர்களுக்கு நேற்று 26/05/2023 காலை 7:45 மணியளவில் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியின் முதல்வர் Y. ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக கிருபா சாரதி பயிற்சி பாடசாலையின் அதிபர் அ. கிருபாகரன், இலங்கை முதலுதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் வை. மோகனதாஸ், இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை நிர்வாக திட்டமிடல் பொறுப்பாளரும் பயிற்சி ஆசிரியருமான ம. அன்பரசன், இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய கண்காணிப்பாளர் கௌரவ கலாநிதி வை. ஜெகதாஸ், பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி R. இராசதுரை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)