
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
2022/2023 ஆண்டுக்கான சிவனடி பாத மலை பருவ காலம் நிறைவு
கடந்த டிசம்பர் மாதம் 7 திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமான சிவனடி பாத மலை பருவ காலம் 05.05.2023 வெள்ளிக்கிழமை வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்தன்று இரவுடன் 2022/2023 ஆண்டுக்கான சிவனடி பாத மலை பருவ காலம் நிறைவுக்கு வந்தது.
சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இன்றைய தினம் (06) காலை சுபவேளையில் சுவாமிகள் குருவிட்ட எரந்த வழியாகவும், பலாபதபல வழியாகவும், மலை உச்சியில் இருந்து லக்க்ஷபான இராணுவ முகாம் இராணுவ அதிகாரிகள் இணைந்து சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆபரணங்கள் அணையத்தையும் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு நல்ல தண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தில் வைத்து அங்கு இருந்து வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக நோட்டன் வழியாகவும், மேலும் மஸ்கெலியா பொகவந்தலாவ வழியாகவும் இன்று மதியம் (06) 3.00.மணிக்கு கொண்டு செல்லபட்டு இன்று இரவு இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் பிரதிஷ்டை செய்ய பட உள்ளது என பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)