
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புகைக் கூண்டால் தீப்பற்றிய வீடு
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளைப் பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது.
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்கத் திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று முன் தினம் வெளளிஇரவு 07 மணியளவில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர்.
இதன்போது வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு ஒன்று பருத்தித்துறை தும்பளைப் பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)