
posted 25th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பழக்கடைகளில் பரிசோதனை
நிந்தவூர் பிரதேசத்தில் பழக்கடைகளின் தரத்தைப் பேணும் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அனைத்து பழக்கடைகளிலும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். றயீஸின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் இச்சோதனையின் போது மக்களின் நுகர்வுக்கு பொருத்தமற்ற பழங்கள் மற்றும் செயற்கையாக பழங்களை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தக் கூடிய இரசாயனங்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இப் பரிசோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பணிமனை ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
பழுக்கவைக்க பயன்படுத்தப்படும் இரசாயனம் கலந்து தெளிக்கப்பட்ட பழங்களை உண்பதால் நோய்த் தாக்கம் ஏற்படுகின்றன. எனவே, இதனை தடுக்கும் பொருட்டு மக்கள் விழிப்புடன் இருந்து, *0672250834* என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி கே.எல்.எம். றயீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)