சிறுவர் கடத்தல் வழக்கில் இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிறுவர் கடத்தல் வழக்கில் இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

மன்னாரில் பாடசாலை சிறுவர்களைக் கடத்த முற்பட்டதாக தெரிவித்து மன்னார் பொலிசாரால் மன்னார் நீதிவான நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் அடையாள அணி வகுப்புக்களில் எந்தவொரு சிறுவர்களாலும் சந்தேக நபர்கள் அடையாளம் காட்டவில்லை.

அண்மைக் காலமாக மன்னார் பகுதியில் இனம் தெரியாதவர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைத்து வெள்ளை வேனில் கடத்துவதற்கு எத்தனித்து வருவதாக பரபரப்பு காணப்பட்டபோதும் இது தொடர்பாக தலைமன்னார் பொலிசில் ஒரு முறைப்பாடும், மன்னார் பொலிசில் மூன்று முறைப்பாடுகளும் பதிவாகி இருந்தன.

இது தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இந்த நான்கு வழக்குகளின் சந்தேக நபர்களாக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை கடத்த எத்தனித்ததாக தலைமன்னார் பொலிசாரல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 18.05.2023 அன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பில் பாதிப்படைந்த மூன்று சிறுமிகளும் இந்த இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து மன்னார் பொலிசாரல் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த இரு சந்தேக நபர்களுக்கான மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகளின் இதே சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பு 19.05.2023 அன்று நடைபெற்றபோது பாதிப்படைந்திருந்த இரு மாணவர்களும் அடையாளம் காட்டவில்லை.

இதேவேளையில் மன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்றாவது சிறுமி கடத்தலுக்காக எத்தனித்த வழக்கானது இதே இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணி வகுப்பு திங்கள் கிழமை (22.05.2023) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.எம். சாஜூத் முன்னிலையில் நடைபெற்றபோது இந்த சிறுமியும் சந்தேக நபர்களை அடையாளம் காட்டவில்லை.

நான்கு வழக்குகளிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்ற இந்த இரு சந்தேக நபர்களையும் தலைமன்னார் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு தவிர்ந்த மன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று வழக்ககளில் இந்த இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டப்படவில்லை.

மன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களின் மூன்று வழக்குகளும் திங்கள் கிழமை (22) அழைக்கப்பட்டிருந்த பொழுது மன்றில் இவர்களுக்காக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் வாதங்களைத் தொடர்ந்து இந்த இரு சந்தேக நபர்களுக்கும் தலா இரண்டு பேர் வீதம் ஒவ்வொரு வழக்குக்கும் தலா இரண்டு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தும் தலைமன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரு சந்தேக நபர்களுக்கான வழக்கில் எதிர்வரும் 01.06.2023 வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இவ் வழக்குகள் எதிர்வரும் 24.07.2023 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜூன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா, செபநேசன் லோகு மற்றும் டெனிஸ்வரன் ஆகியோரும் பாதிப்படைந்தோர் சார்பில் சட்டத்தரணிகள் உனைஷ் பாருக் மற்றும் செ. டினேஸ் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

சிறுவர் கடத்தல் வழக்கில் இரு சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)