
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கெரோயின் போதை பொருளுடன் 56 வயது நபர் கைது
சில்லறை விற்பனைக்காக நீர்கொழும்பிலிருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட கெரோயின் போதைப் பொருள் 56 வயதுடைய நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் செவ்வாய் கிழமை (22) காலை 7.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்;
சம்பவம் அன்று (23) மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயிலங்குளம் - அடம்பன் வீதியில் வைத்து ஒரு நபரை பொலிசார் வீதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடமிருந்து 30 கிராம் கெரொயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
மாவட்ட சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்பில் உதவிபொலிஸ் அத்தியட்ச்சகர் பொலிஸ் அதிகாரி கேரத் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயகவின் வழிகாட்டலில் பொலிஸ் சாஜன் 36501 ரத்னமணல தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச் சந்தேக நபரை போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.மன்னார் தோட்டவெளியினை சேர்ந்த 56 வயது நபரிடமிருந்தே 30 கிராம் கெரொயின் போதைப் பொருள் கைப்பெற்றப்பட்டுள்ளது
விசாரணையில் இதனை நீர்கொழும்பில் இருந்து மன்னாருக்கு விற்பனைக்காக கொண்டு வந்தது என கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கைப்பற்றபட்ட கெரொயின் மற்றும் சந்தேக நபர் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)