
posted 29th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வெடுக்குநாறிமலை விவகாரம் ஐ. நா. பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
அநீதிக்குப் புறம்பான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா?
ஆதாரம் இல்லாமல் அதிகாரத் துஸ்பிரயோகம்
சிவனின் தலத்திற்கு சீருடை உரிமை கொண்டாடுவதா?
வெடுக்குநாறிமலையில் நீதிமன்ற உத்தரவைமீறி சைவ சமய வழிபாடுகளை நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பணிமனை மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளைச் செய்துள்ளது.
கடந்த சிவராத்திரி தினத்தில் நீதிமன்ற உத்தரவைமீறி சைவ சமய வழிபாடுகள் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் பொலிஸாரிடம் இல்லாமையால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையால் விடுதலையான தமிழ் இளைஞர்களே இந்த முறைப்பாட்டை வழங்கினர்.
தவறு செய்த பொலிஸ் அதிகாரிகளை குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரும், தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அவமானங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் தமது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)