
posted 11th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
விமான படை கண்காட்சியில் பங்கேற்ற ஏராளமான மக்கள்
விமான படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு 'வான் சாகசம் – 2024' கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் (10) ஐந்தாவது நாளாகவும் நடந்தது.
''நட்பின் சிறகுகள்'' எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமான இந்தக் கண்காட்சி நேற்று (11) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை நடைபெற்றது.
இதன்போது, ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, விமானப் படை தளபதி உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட விமானப்படையின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பல்வேறு சாகசங்கள், கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. பெருமளவான பார்வையாளர்களும் திரண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)