
posted 10th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாண இளைஞர்கள் விமான படையில் சேர அழைக்கும் அமைச்சர்
யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் விமானப் படையில் இணைய வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
விமானப் படையின் 73ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் - முற்றவெளியில் விமானப் படை நடத்தி வரும் கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், விமானப் படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கண்காட்சிக்கு யாழ்ப்பாண மக்களால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நேற்றைய தினம் (09) மாத்திரம் இந்த கண்காட்சிக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தார்கள். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயம். இங்குள்ள மக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விமானிகளும் விமானப்படையின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)