
posted 27th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
செயலகத்தின் நிர்வாகச் சீர்கேடு - ஆர்ப்பாட்டத்தில் மக்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்மீதான நிருவாக அடாவடித்தனத்திற்கு எதிராக நீதி கோரி நடாத்தும் மக்கள் போராட்டம் இன்று புதன் கிழமை (27) மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.
அரசியல்வாதிகளே, அரச அதிகாரிகளே, அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன? என்று அங்கு குழுமியிருந்த மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின் முன்னால் வீதியியருகே அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். குளப்பம் எதுவும் வராமல் தடுக்கப் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்திலுள்ள மக்கள் கூறுகையில்,
கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன என்றனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)