
posted 31st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சுத்திகரிக்கப்படும் கல்முனை கடற்கரைப் பகுதி
சர்வதேச கழிவுகளற்ற தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (30) விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் பணிப்புரை மற்றும் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீமின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸின் மேற்பார்வையில் திண்மக்கழிவகற்றல் பிரிவினரால் இச்சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
றமழான் நோன்பு காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் இப்பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் மாநகர ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸ்மி நன்றி தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)