உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யார்?

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன உயிர்தஞாயிறு குண்டு வெடிப்பிற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு. எனவே அவர் துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் குண்டுவெடிப்பு சூத்திரதாரி யார் என்பதை விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும், புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களைத் தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன். ஒரு சாதாரண மனிதனைப்போல முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டுவெடிப்பு இடம்பெறுகின்றபோது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கவேண்டும்.

ஆனால், அவர் அதை விட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே, ஒரு வேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டு வந்துள்ளோம் என்பதையிட்டு நாங்கள் வெட்கப்பட வேண்டும்.

ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார்? யாருக்கு அச்சப்படுகின்றார்? அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்புக்கும் அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு.

ஆகவே, அவர் ஒரு துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் சூத்திரதாரி யார்?

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)