
posted 19th April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அன்னை பூபதியின் நினைவு தினம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை தமிழரசு கட்சியை ஏற்பாட்டில் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது காலை 8 மணியளவில் கிளிநொச்சி பொதுச் சேவை சந்தை முன்பாக இடம் பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)