
posted 11th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் படையினரால் 109 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் படைகளின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒருபகுதியை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) ஞாயிறு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரட்ண, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல். இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள், படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)