
posted 24th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பாரம்பரியம் காத்த முன்னைய அதிபர்கள்
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் முன்னாள் அதிபர்களாகக் கடமையாற்றிய எஸ்.எச்.ஏ. அலியார் மற்றும் ஐ.எல். லத்தீப் ஆகியோர் பாடசாலைக்கு வருகை தந்து தற்போதைய அதிபர் ஏ. அப்துல் கபூரைச் சந்தித்து பாடசாலையின் தற்கால விடயங்கள் பற்றி கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். அத்துடன் பாடசாலையின் நிந்தவூர் பாரம்பரியங்களை நினைவு கூருமுகமாக பல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அவர்கள் உறுதியளித்தனர்.
அச்சந்தின்போது நிந்தவூரின் வரலாற்று பிரதிபலிப்பை நினைவு கூரத்தக்க பனிச்ச மரத்தையும், பெறுமதிமிக்க கருங்காலி மரத்தையும் கொண்டு வந்து பாடசாலையில் நாட்டினர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)