
posted 25th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பனைமரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது
அனுமதியற்ற சட்ட விரோத பனை மரங்களை ஏற்றிய கெப் ரக வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவரை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் விசேட குற்ற புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)