
posted 19th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள் அமைப்பினரின் அன்பளிப்பு
தமிழ் ஒப் லங்கா உதவும் கரங்கள் அமைப்பினர் மத்திய மாகாணத்தின் தெல்தெனிய கல்வி வலயத்திலுள்ள றங்கல நாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 154 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகளையும், இப் பாடசாலையின் பயன்பாட்டிற்கு ஒலிபெருக்கி சாதனங்களையும் அன்பளிப்பு செய்தனர்.
இப் பாடசாலை அதிபர் எஸ். பாலசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இவ் அமைப்பின் தலைவர் எஸ். இளந்தீபன், தெல்தெனிய மெததும்பர கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். நீதிராசா ஊடகவியலாளர் செல்லையா - பேரின்பராசா ஞா. தயாளன் றங்கல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)