
posted 12th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
செயலாளராக தெரிவு
ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராக குருநாகல் மடிகே மிதியாளையை சேர்ந்த அஷ்ஷேய்க் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (முப்தி ) தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மேற்படி இந்த நியமனம் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் ஜம்மிய்யாவின் கல்முனை தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற போது சபையோரின் பூரண அனுமதியுடன் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கலாபூஷணம் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி ) அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் விஸ்தரிக்கப்படுவதாகவும் அல்குர்ஆன் சுன்னா முறைப்படி நல்லிணக்கத்துடன் செயற்படும் முஸ்லிம் சமூகத்தின் ஒரு அமைப்பாகவும் இது செயற்படுவதுடன் காதியானிகள், சியாக்கள், அத்துவைத கொள்கைகள் அற்ற, தம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் அல்குர்ஆன் சுன்னாவை நேசிக்கும் அனைவரும் ஸ்ரீலங்கா ஜமியத்துல் உலமா சபையில் இணைந்து செயல்பட முடியும் என்று ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் கலா பூசனம் அஷ்ஷைக் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் (மதனி /முப்தி) தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)