
posted 1st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது
தமிழ் அரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 2017ம் ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது.
இப்பொழுது தமிழரசுக் கட்சிக்குள் தலைமை பதவிக்கான போட்டி நடக்கின்றது. அது உண்மையாகவே எம்மைப் பொறுத்தவரையில் அது ஓர் உட்கட்சி சம்பந்தமான விவகாரமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அது பூதாகாரப்படுத்தி இன்று அது நீதிமன்றம் வரை சென்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ் அரசுக் கட்சி இல்லாவிட்டால் எஞ்சியது இல்லை என்ற ஒரு படம் காட்டப்படுவது போன்ற சூழல்தான் காட்டப்பட்டிருக்கிறது. எங்களை பொறுத்த வரையில் தமிழ் அரசுக் கட்சி மிகமிக பலவீனமான சூழ்நிலைக்குள் சென்றுவிட்டது.
ஆகவே, தமிழ் அரசுக் கட்சியும்கூட சுருங்கிப் போயிருக்கிறது என்பதை தமிழ் அரசுக் கட்சியில் இருக்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தாய் கட்சி என்றோ அல்லது நாங்கள் பெரிய கட்சி என்றோ வாதிடுவது மாத்திரமல்ல அங்கு ஒரு தலைமைப் பதவி என்ற ஒரு போட்டிகூட இருக்கிறது.
எங்களை பொறுத்த வரையில் தமிழ் அரசுக் கட்சியின் காலம் என்பது முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)