
posted 4th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அஞ்சல் திணைக்களத்தின் வியாபார மேம்பாட்டு திட்டம்
அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின்படி வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் கல்முனை நகரை மையப்படுத்தி கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ. எல். எம். பைஸர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி திட்டம் அஞ்சல் மா அதிபரின் எண்ணக்கருவின் அடிப்படையில் கிழக்கு மாகாண அஞ்சல் மா அதிபதி எம். எச். எம். அஸ்லம் வழிகாட்டலில் அக்கரைப்பற்று அம்பாறை பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் கே.பி.எஸ். பியந்தவின் பங்கேற்புடன் கல்முனை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமாகி தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் சென்று மீண்டும் கல்முனை பிரதம அஞ்சலகத்தை பேரணி வந்தடைந்தது.
இதன்போது, அஞ்சலகத்தின் சேவைகள் தொடர்பாக விழிப்பூட்டல்களை துண்டுப்பிரசுரம் மூலம் நகரப்பகுதி வர்த்தக நிலையங்கள் பொதுமக்கள் இடையே விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)