
posted 10th March 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வெடி பொருட்களுடன் இருவர் மன்னார் பள்ளிமுனையில் கைது
மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து பள்ளிமுனை கடற்கரை பிரதேசத்தில் மீன் பிடிக்க பாவிக்கப்படும் என தெரிவிக்கப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச் சம்பவம் வியாழக்கிழமை (09) இடம்பெற்றது.
இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில்;
சம்பவம் அன்று மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்தவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் பிரபாத்விதானகேவின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றதடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி உ.பொ.ப. ஜெயவர்த்தன பொ.சா.36501 ரத்னமணல தலைமையிலான பொலிஸ் குழுவினர் பள்ளிமுனையில் குறிப்பிடப்பட்ட கடற்கரை பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது மீன்பிடிக்கப் பாவிக்கப்படும் என தெரிவிக்கப்படும் வெடிப்பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களாக jJEANETTENITA STRICT -158 மற்றும் DETONATIR 200 மற்றும் அதற்குப் பயன்படும் 160 அடி நூல் மற்றும் கொண்டுசெல்ல தயாராக வைத்திருந்த பட்டா வாகனத்தைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்து உள்ளனர்.
இதில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் இருவரும் நாரம்பனைப் பகுதியை சேர்ந்த 35 , 54 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)